கண்ணன் பாட்டு
கண்ணம்மா -- என் காதலி காட்சி வியப்பு (செஞ்சுருட்டி-ஏகதாளம். ரசங்கள்: சிருங்காரம்; அற்புதம்) |
|
சுட்டும்விழிச் சுடர்தான், -- கண்ணம்மா! சூரிய சந்திரரோ? வட்டக் கரியவிழி, -- கண்ணம்மா! வானக் கருமைகொல்லோ? பட்டுக் கருநீலப் -- புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் -- தெரியும் நக்ஷத்தி ரங்களடீ! |
1 |
சோலைமல ரொளியோ -- உனது
சுந்தரப் புன்னகைதான்? நீலக் கடலலையே -- உனது நெஞ்சி லலைகளடீ! கோலக் குயிலோசை -- உனது குரலி னிமையடீ! வாலைக் குமரியடீ, -- கண்ணம்மா! மருவக் காதல்கொண்டேன். |
2 |
சாத்திரம் பேசுகிறாய், -- கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ? ஆத்திரங் கொண்டவர்க்கே, -- கண்ணம்மா! சாத்திர முண்டோடீ? மூத்தவர் சம்மதியில் -- வதுவை முறைகள் பின்புசெய்வோம்; காத்திருப் பேனோடீ? -- இது பார், கன்னத்து முத்தமொன்று! |
Parathiyar Kavithigal
Kavithaigal
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment